சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-09-02 19:55 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மாயாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்