கைலாசநாதர் கோவிலில் 16 வகை அபிஷேகம்
கைலாசநாதர் கோவிலில் 16 வகை அபிஷேகம் நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவிலில் மகா சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினார்.