நெசவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-04 20:04 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 61). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். கடந்த 10-12-2018 அன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கருப்பசாமி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார், மேலும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.35 ஆயிரம் நஷ்டஈடு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் செய்திகள்