குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார்.

Update: 2021-09-05 18:51 GMT
குளித்தலை,
திருவண்ணாமலை மாவட்டம் அரியத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 28). இவருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முகநூல் வழியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ரவீந்திரன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரவீந்திரனை கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் ரவீந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்