மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-05 19:58 GMT
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரை கைது செய்து, மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்