தாய்-மகளுடன் பெண் தற்கொலை

சிருங்கேரியில் தாய்-மகளுடன் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2021-09-06 21:14 GMT
சிக்கமகளூரு: சிருங்கேரியில் தாய்-மகளுடன் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

ஒரே வீட்டில் வசித்தனர்

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா மகிமனே கிராமத்தை சேர்ந்தவர் சாரதம்மா (வயது 70). இவரது மகள் வீனா (49). இவருக்கு திருமணம் ஆகி கணவர், சர்வியா (16) என்ற மகள் உள்ளனர். வீனா தனது கணவர், மகள், தாய் சாரதம்மா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

வீனா ஒன்னவள்ளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீனா வேலைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடன் பணிபுரியும் பூர்ணிமா என்பவர் வீனாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை எடுத்து அவர் பேசவில்லை. 

தூக்கில் பிணமாக தொங்கினர்

இதனால் பூர்ணிமா, வீனாவின் பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு, வீனா பற்றி கேட்டுள்ளார். இதனால் பக்கத்துவீட்டை சேர்ந்தவர், வீனாவின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சாரதம்மா, வீனா, சர்வியா ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

சம்பவம் பற்றி அவர் சிருங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை

போலீஸ் விசாரணையில், வீனாவுக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வீனா தனது தாய், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

அதுபோல் வீனாவின் கணவர் காலை வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகே இந்த சம்பவம் நடந்ததாக அறியப்படுகிறது. 

காரணம் என்ன?

இதுதொடர்பாக சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 பேரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி வீனாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்