1,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வெம்பக்கோட்டை அருகே 1210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி, மேல தாயில்பட்டி, சங்கரபாண்டிபுரம், சிப்பிபாறை, புல்லகவுண்டன்பட்டி, ராமுதேவன்பட்டி மினி கிளினிக், மற்றும் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உள்பட 1,210 பேருக்கு தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.