கடனை திருப்பிக்கேட்ட பெண்ணை தாக்கியவருக்கு சிறை- மனைவிக்கு அபராதம்

கடனை திருப்பிக்கேட்ட பெண்ணை தாக்கியவருக்கு சிறை- மனைவிக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-09-08 20:40 GMT
செந்துறை:

தாக்குதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வினோதசாந்தி. இவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த சுரேசும், வினோதசாந்தியும் ஜெயக்கொடியை தாக்கி உள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொடி கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை செந்துறை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி செந்தில்குமார் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், கடன் கொடுத்த பெண்ணை தாக்கிய சுரேசுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்