திசையன்விளை பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

Update: 2021-09-09 20:56 GMT
திசையன்விளை:
உவரி அருகே கூடுதாழை விலக்கை சேர்ந்தவர் சிலுவை மகன் ரவி (வயது 40). இவர் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். ரவி நேற்று இரவில் திசையன்விளை பஸ் நிலையத்தில் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்