ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சஞ்சீவி தலைமை தாங்கினார். துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்தி முன்னிலை வகித்தார். இதில் நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.