புதிதாக 7 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-10 20:14 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலுர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 85 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 143 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்