சிவகிரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

Update: 2021-09-11 22:11 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் குலாளர் தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி சந்திரா. இவர்களின் மகன் ஜீவா (வயது 22). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். 
காளிராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதையடுத்து ஜீவா தனது தந்தைக்கு அறிவுரை கூறினாா். ஆனால் இதை காளிராஜ் பொருட்படுத்தவில்லை. இதனால் மனமுடைந்த ஜீவா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்