1,150 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,150 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-12 16:42 GMT
விழுப்புரம், 
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 1,150 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில்  சுகாதாரத்துறை மட்டுமின்றி, அனைத்துத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 85 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கலெக்டர் மோகன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்