மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-12 20:25 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் டிராக்டர்களில் மணல் கடத்துவதாக விருதுநகர் மாவட்ட கனிமவளத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் திருக்கண்ண முனியாண்டி ரோந்துசென்றார். சென்னா குளம் ரெகுநாதபுரம் அருகே சிலர் 2 டிராக்டர்களில்  மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்