பாம்பு கடித்து பள்ளி மாணவி சாவு

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்தார்

Update: 2021-09-12 20:45 GMT
துறையூர்
 துறையூரை அடுத்த கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். விவசாயி. இவரது மகள் வித்யா(வயது 11). இவர் கோட்டாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பெற்றோருடன் வயலுக்கு சென்ற அவர் மாலையில் வீட்டிற்கு திரும்புவதற்காக வரப்பில் நடந்து வந்தார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது. துறையூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று காலை வித்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்