தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-09-14 17:14 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 34 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 199 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 250 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்