பெரம்பலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-14 17:47 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 813 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மொத்தம் 35 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னை, சேலம், நாமக்கல் திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் கொரோனா அறிகுறிகளுடன்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குகொரோனா தடுப்புஊசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்