எலி மருந்தை தின்று மாணவி தற்கொலை

எலி மருந்தை தின்று மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-09-14 17:50 GMT
அரியலூர்
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மாத்தாயி தெருவைச் சேர்ந்தவர் குருநாதன்(வயது 48). விவசாயி. இவரது மகள் சந்தியா(17). இவர், தனது பாட்டி வீடான கழுமங்கலம் கிராமத்தில் தங்கி பரணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் சந்தியாவிடம் அவரது தந்தை குருநாதன் பரணம் அரசு பள்ளியில் படிக்கவேண்டாம், நமது ஊரில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா கடந்த 6-ந் தேதி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்றுள்ளார்.
பின்னர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த சந்தியாவை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தியா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்