திருப்பூர் மாவட்டத்தில் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Update: 2021-09-15 15:44 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
88 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி நேற்று சற்று அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
98 பேர் குணமடைந்தனர்
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 91 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 934 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 943 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று சற்று அதிகரித்து பாதிப்பு 88 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த  2 வாரத்திற்கு முன்பு பாதிப்பு 63-க்கு கீழே வந்தது. அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று  பாதிப்பு  88 ஆக உயர்ந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்