புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-09-16 18:20 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 398 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்