கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-16 20:23 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 79 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 137 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 716 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 930 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2,155 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,023 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்