லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-17 18:52 GMT
அம்பை:

அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன் பாபு தலைமையில் போலீசார் நேற்று அம்பை ரெயில் நிலையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து மொத்தம் 1¾ டன் ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவரான அம்பை அருகே அடைச்சாணியைச் சேர்ந்த அஜித்தை (வயது 40) போலீசார் கைது செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை அம்பை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்