கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 33 பேர் பாதிக்கப்பட்டனர். 18 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 41 ஆயிரத்து 870 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 271 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உள்ளது.