கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் தடையை மீறி கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-09-20 18:49 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே கூரியூர் பள்ளிவாசல் அருகில் அரசின் அனுமதியின்றி தடை உத்தரவை மீறி கொரோனா பரவும் வகையில் கபடி போட்டி நடத்தியது தெரிந்தது.இதனை தொடர்ந்து போட்டி நடத்திய கூரியூரை சேர்ந்த தமிழ்மணி (வயது27) , அஜீஸ்பாய் (40), ரபீக் (34), முருகானந்தம் (35) ஆகிய 4 பேர் மீது நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்