மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்

மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-21 21:36 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அறங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறங்கோட்டையில் இருந்து ஸ்ரீபுரந்தான் நோக்கி மொபட்டில் 3 மூட்டைகளோடு வந்த நபரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதையடுத்து அந்த நபர் மொபட்டை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மொபட்டில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் அறங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மொபட்டை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்