தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் சாவு

பண்ருட்டி அருகே தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.

Update: 2021-09-23 17:20 GMT
புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கு (வயது 65). இவருடைய மகன் சுரேஷ்குமார்(45), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் நரசிங்கு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. 
இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது சுரேஷ்குமார், தனது தந்தையின் இறுதிச் சடங்கை செய்து கொண்டிருந்தார்.

மயங்கி விழுந்தார்

 இதற்கிடையே அவர், திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து தந்தை-மகன் இருவரின் இறுதிச்சடங்கையும் உறவினர்கள் ஒரே நேரத்தில் நடத்தினர். இறந்த சுரேஷ்குமாருக்கு ஆண்டாள் என்கிற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தையின் இறுதிச்சடங்கில் மகன் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்