திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

Update: 2021-09-24 19:44 GMT

திருச்சி, செப்.25
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்து 689 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்