தற்கொலை

ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-26 18:34 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நந்தகுமார் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்