வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை- ரூ.35 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை- ரூ.35 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2021-09-28 20:14 GMT
அரியலூர்:

நகை- பணம் திருட்டு
அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வைஜெயந்தி. இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் கடந்த 26-ந் தேதி அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
போலீசார் விசாரணை
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசில் வைஜெயந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்