கூலித்தொழிலாளி விபத்தில் பலி

கூலித்தொழிலாளி விபத்தில் பலியானார்.

Update: 2021-09-29 18:25 GMT
கரூர்,
கரூர் ராயனூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை கரூர்-திண்டுக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்