பள்ளி மாணவர் மாயம்; தந்தை புகார்

பள்ளி மாணவர் மாயம் ஆனார்.

Update: 2021-10-03 18:33 GMT
கரூர்
கரூர் அருகே உள்ள நன்னியூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்து வந்த ஸ்ரீஹரி திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் ஸ்ரீஹரியை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்