நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2021-10-05 22:53 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 1-ஆக  உயர்ந்துள்ளது. 48 ஆயிரத்து 350 பேர் குணமடைந்து உள்ளனர். 221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தென்காசி மாவட்டத்திலும் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 293-ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 771 பேர் குணமடைந்து உள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 937 ஆக உள்ளது. நேற்று 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 55 ஆயிரத்து 356 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்