பேரணாம்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பேரணாம்பட்டில் வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள் தடையத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றனர்.

Update: 2021-10-11 17:18 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள் தடையத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றனர்.

வீடுபுகுந்து திருட்டு

பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகர் சேரன் வீதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய வீட்டில் ஒரு பகுதியில் ஆனந்தன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். ஆனந்தன் தனது பாட்டியை பார்ப்பதற்காக அருகிலுள்ள மசிகம் கிராமத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சாந்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த துணி, மளிகை பொருட்களை தரையில் கொட்டி நகைகளை தேடிப்பார்த்துள்ளனர். 
மேலும் பீரோவை உடைத்து சுமார் ¾ பவுன் கம்மல், ஆனந்தன் வீட்டின் கதவை உடைத்து 1/2 பவுன் கம்மல், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக்கொடி, மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 
திருடிய நபர்களின் தடயம் ஏதும் தெரியாமலிருக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். 

மிளகாய் பொடி தூவினர்

அதேபோன்று அருகிலுள்ள முருகேசன் என்பவருடைய வீட்டில் திருட முயற்சித்துள்ளனர். கதவு பலமாக இருந்ததலால் திறக்க முடியவில்லை. மேலும் சிறிது தூரத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் பாஸ்கர் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். ஆனால் வீடு காலி செய்யப்பட்டிருந்த தலால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இது குறித்து பேரணாம் பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார்  விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்