கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

விருதுநகரில் கலெக்டர் முன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-11 20:39 GMT
விருதுநகர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 63). செங்கல் சூளை தொழிலாளியான இவரது வீட்டிற்கான பொதுபாதை அடைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று கலெக்டர்அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நுழைந்த கருப்பையா குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த இடத்திலேயே தனது பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காததற்கு தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரைதடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்