வாக்கு எண்ணும் ஊழியர்கள் போராட்டம்

நாங்குநேரியில் வாக்கு எண்ணும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-12 19:19 GMT
நெல்லை:

நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த நிலையில் இரவு 10.15 மணி வரை வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்