டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் ராஜா, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. அழகர்சாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.