சுந்தரம்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் வேட்பாளர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
சுந்தரம்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் வேட்பாளர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட அருள்செல்வி வாக்குப்பதிவின் போது ஓட்டுப் பெட்டிகள் சீல் உடைத்து தனக்கு காட்டவில்லை என்றும், ஓட்டு எண்ணும் இடத்தில் முறைகேடு நடந்ததாக கூறி தனது ஆதரவாளர்களுடன் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து, மனுவாக எழுதி தரக்கோரினர். மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் பெற்றுக்கொண்டார்.