ஆலங்குடி:
ஆலங்குடி அடுத்துள்ள நம்பன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த ஒரு காரில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.