அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-13 19:38 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மீனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கோவையை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகராஜ் (வயது 39) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்