மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-17 19:30 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி செந்தாமரை(வயது 50) என்பவர், தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து செந்தாமரையை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்