மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன் பலி

அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவன் பலியானார்.

Update: 2021-10-18 19:35 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை காந்திநகர் அங்கம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது52). இவருடைய மனைவி கோகிலா (39).இந்நிலையில் ஈஸ்வரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாய்பாபா கோவில் எதிரே சர்வீஸ் சாலையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஈஸ்வரனும் கோகிலாவும் படுகாயம் அடைந்தனர்.அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கோகிலா அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்