ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-19 18:44 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், ஒன்றிய பொருளாளர் அருள், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மண்டல நிர்வாகிகள் நாகராஜன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். மாநில இணைச்செயலாளர் திருமால்வளவன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சாந்தி, புவனேஸ்வரி, செல்லதுரை, ராஜா, மணிமாறன், சிவகுமார், வேல்முருகன், முனுசாமி, பழனிசாமி, குமுதா, சங்கீதா, சரஸ்வதி, செல்வி மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்