ராணுவ வீரர் தற்கொலை

தேனியில் முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-20 16:54 GMT
தேனி: 

தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களாக அடிக்கடி மது குடித்து வந்தார். அவருடைய மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் குடி பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறி வந்தனர். ஆனால், கண்ணன் குடி பழக்கத்தை கைவிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்