கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி 1-வது வார்டு பாம்பு நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த இந்து ராணி (வயது 55) என்பவரை போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.