பிளஸ்-2 மாணவி தற்கொலை

தேனி அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-21 14:54 GMT
தேனி: 

தேனி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பவித்ரா (16). இவர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். வெளியே சென்றிருந்த அவருடைய பெற்றோர் வீடு திரும்பிய போது அவர் தூக்கில் பிணமாக கிடந்தார். 

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்