உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே மழவராயன் பகுதியில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ஆட்டோவில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த விக்னேஷ் (வயது 23), ரகுராம் (32) மற்றும் சுரேந்தர் (25). ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டோ, கஞ்சா, 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.