டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-10-21 18:18 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை மாடல் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மகன் பிரகாஷ் (வயது 38) டிராவல்ஸ் உரிமையாளர். இவர் தனது வீட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  கில்லனூர் குறுக்கு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி பிரகாஷ் மீது மோதியது.  இதில் அவர் இறந்தார்.பின்னர் அந்த லாரி நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றது. இதைபார்த்த அப்பகுதி மக்கள், வாகனங்களில் விரட்டி சென்று அந்த லாரியை மடக்கிபிடித்தனர். பின்னர் லாரியுடன் டிரைவரை பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
உளுந்தூர்பேட்டை அருகே புள்ளூர் குறுக்குசாலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து இறந்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், விபத்துக்கு காரணமான வாகன டிரைவர் யார் என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்