சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மங்களமேடு,
கள்ளக்குறிச்சி கர்னாபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 20), பெயிண்டர். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உளுந்தூர்பேட்டையில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டனர்.