உளுந்தூர்பேட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Update: 2021-10-22 17:25 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை மீனாட்சிபுரம் அருகே உள்ள வி.கே.எஸ்.கார்டன் பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று தினகரன்(வயது 44) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அங்கே நாட்டுத்துப்பாக்கியை அனுமதியின்றி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்