அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

Update: 2021-10-22 19:40 GMT
துவரங்குறிச்சி, அக்.23-
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவர் மணப்பாறை-திண்டுக்கல் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் தினேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்